ADDED : நவ 08, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு முருகேச முதலியார் தெரு தண்ணீர் தொட்டி அருகில், அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், இறந்த நபர் செங்கல்பட்டு முருகேசனார் தெருவைச் சேர்ந்த ராஜா, 32, என்பதும், கூலி வேலை செய்து வந்த இவர், மதுவுக்கு அடிமையாகி சுற்றி வந்ததும் தெரியவந்தது.
சில நாட்களாக, வீட்டிற்கு செல்லாமல், திருமணமாகாத விரக்தியில் இருந்து வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.