/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பைக்கில் வாலிபரை அழைத்து சென்று கொலை செய்த உறவினர் கைது
/
பைக்கில் வாலிபரை அழைத்து சென்று கொலை செய்த உறவினர் கைது
பைக்கில் வாலிபரை அழைத்து சென்று கொலை செய்த உறவினர் கைது
பைக்கில் வாலிபரை அழைத்து சென்று கொலை செய்த உறவினர் கைது
ADDED : ஜூலை 13, 2025 12:24 AM

செய்யூர்:வாலிபரை பைக்கில் அழைத்து சென்று, கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த அம்மனுார் கிராமத்தை சேர்ந்தவர் தருமன். இவரது மகன் சுபாஷ், 25, இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் சுரேந்தர், 27. நேற்று முன்தினம் நள்ளிரவு சுபாஷ் வீட்டிற்கு சென்ற சுரேந்தர், சுபாஷை இருசக்கர வாகனத்தில் செய்யூர் அழைத்து சென்றார். சுபாஷ் பைக்கை ஓட்டினார்.
அம்மனுார் ஆத்திக்குட்டை அருகே சென்றபோது, திடீரென சுரேந்தர் தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் சுபாஷ் கழுத்தை கொடூரமாக அறுத்துள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்து பைக்கில் இருந்து இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். ரத்தவெள்ளத்தில் இறந்து போன சுபாஷ் உடலை அங்கேயே விட்டு விட்டு சுரேந்தர் வீட்டிற்கு சென்று விட்டார்.
சுபாஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்டனர். 'ஸ்விச் ஆப்' செய்யப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் தேடி சென்றனர்.
இந்நிலையில் ஆத்திக்குட்டை சாலையில் சென்றவர்கள் சுபாஷ் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக கிடப்பதாக போலீசார் மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் போலீசார், சுபாஷ் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டா கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டில் பதுங்கி இருந்த சுரேந்தரை நேற்று மாலை போலீசார் கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.