sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கைதிகளை சந்திக்க அனுமதி மறுப்பு சிறை வாயிலில் உறவினர்கள் போராட்டம்

/

கைதிகளை சந்திக்க அனுமதி மறுப்பு சிறை வாயிலில் உறவினர்கள் போராட்டம்

கைதிகளை சந்திக்க அனுமதி மறுப்பு சிறை வாயிலில் உறவினர்கள் போராட்டம்

கைதிகளை சந்திக்க அனுமதி மறுப்பு சிறை வாயிலில் உறவினர்கள் போராட்டம்


ADDED : ஜன 13, 2025 11:41 PM

Google News

ADDED : ஜன 13, 2025 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல், ஹிந்து முன்னணி பிரமுகர்கள் கொலை வழக்கு, கோவை வெடிகுண்டு வழக்கு என, பல்வேறு வழக்குகளில் தொடர் புடைய பயங்கரவாத கைதிகள் புழல் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத கைதிகளான பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன் உள்ளிட்டோர், சோதனையின் போது சிறை போலீசாரிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரது குடும்பத்தினர், இருவரையும் சந்திக்க வேண்டும் என, நேற்று புழல் சிறைக்கு வந்தனர். ஆனால், சிறைத்துறை சார்பில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், சிறைவாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுனர்.

இது குறித்து பிலால் மாலிக்கின் தாய் மும்தாஜ் பேகம் கூறுகையில், ''பிலால் மாலிக் தவறு செய்தால் ஆண்டவன் தண்டனை கொடுப்பான், போலீஸ் அடிக்கக் கூடாது. மகன் இருக்கிறானா, இல்லையா என தெரியவில்லை. அவனை பார்க்க வேண்டும்,'' என்றார்.

பன்னா இஸ்மாயில் மனைவி சமீம் பானு கூறுகையில், ''பொய் வழக்கில் என் கணவர் 12 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறைக்கூடமா, சித்ரவதை கூடமா எனத் தெரியவில்லை. உறவினர் மட்டுமின்றி, வழக்கறிஞர் கூட சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது.

உயிருடன் உள்ளார்களா இல்லையா என தெரியவில்லை. அவரை கண்ணால் பார்க்க வேண்டும் இதுகுறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'சிறையில் காவலர்களை தாக்கி தகராறில் ஈடுபடும் சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மூன்று மாதங்கள் ரத்து செய்யப்படும். சிறை விதிகளின்படி, தற்போது உறவினர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us