sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

காயரம்பேடு ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

/

காயரம்பேடு ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காயரம்பேடு ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காயரம்பேடு ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : அக் 25, 2025 02:58 AM

Google News

ADDED : அக் 25, 2025 02:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: காட்டாங்கொளத்துார் அருகே, காயரம்பேடு ஊராட்சியில், மழைநீர் வடிகால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சி விஷ்ணுப்ரியா நகரில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

சமீபத்தில் பெய்த கனமழையால், இந்த பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது.

இந்த பகுதியை ஆய்வு செய்த செங்கல்பட்டு கலெக்டர் சினேகா, மழைநீர் வடிகால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தலைமையில், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர்.

நெல்லிக்குப்பம் -- கூடுவாஞ்சேரி சாலையில், காயரம்பேடு பகுதியில் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த தனியார் தொழிற்சாலை சுற்றுச்சுவரை இடித்து அகற்றினர்.

மேலும், தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டியிருந்த கட்டடங்களை, 'பொக்லைன்' இயந்திரங்கள் மூலமாக இடித்து அகற்றி, மழைநீர் கால்வாயை துார்வாரி, மழைநீர் செல்ல வழி ஏற்படுத்தினர்.

மேலும், 'வரும் காலங்களில், மழைநீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை செய்தனர்.






      Dinamalar
      Follow us