/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழையில் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு
/
மழையில் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு
ADDED : அக் 20, 2024 12:36 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நெடுஞ்சாலைத்துறை கோட்டம், செங்கல்பட்டு உட்கோட்டத்திற்கு உட்பட்ட சாலைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன.
வடகிழக்கு பருவமழை பெய்ததில், கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை, ராஜிவ்காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலை சீரழிந்தது.
இச்சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன்பின், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், 60 கி.மீ., சாலைகள் சீரழிந்ததுதெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, வண்டலுார் - கேளம் பாக்கம் சாலை, ராஜிவ்காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில், சாலையை சீரமைக்கும் பணியில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பாலம் உள்ள பகுதிகளில், கால்வாய்களை துார் வாரி சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.