sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செய்யூர் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சார் - பதிவாளரை நியமிக்க கோரிக்கை

/

செய்யூர் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சார் - பதிவாளரை நியமிக்க கோரிக்கை

செய்யூர் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சார் - பதிவாளரை நியமிக்க கோரிக்கை

செய்யூர் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சார் - பதிவாளரை நியமிக்க கோரிக்கை


ADDED : பிப் 06, 2025 12:47 AM

Google News

ADDED : பிப் 06, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் பஜார் வீதியில் மாவட்ட கிளை நுாலகம் அருகே, சார் - பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு வீடு, நிலம் வாங்குதல், குத்தகை பத்திரம், கிரயம், தானம் மற்றும் 'செட்டில்மென்ட்' போன்ற 50 முதல் 80 பத்திரங்கள் வரை தினமும் பதிவு செய்யப்படுகின்றன.

இங்கு சார் - பதிவாளராக பணியாற்றி வந்த பசுபதி, கடந்த ஆண்டு டிச., 31ம் தேதி, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.

புதிய சார் - பதிவாளர் நியமனம் செய்யப்படாமல் உள்ளதால், தற்போது பத்திர பதிவு செய்ய, தலைமை எழுத்தர் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.

சார் - பதிவாளர் இல்லாத காரணத்தால் பத்திர நகல், பிறப்பு, இறப்பு சான்றிதழ் போன்ற பணிகள் நடைபெறாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

எனவே, பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள், செய்யூர் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு நிரந்தர சார் - பதிவாளரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us