sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கருங்குழி பேரூராட்சிக்கு பொறியாளர் நியமிக்க கோரிக்கை

/

கருங்குழி பேரூராட்சிக்கு பொறியாளர் நியமிக்க கோரிக்கை

கருங்குழி பேரூராட்சிக்கு பொறியாளர் நியமிக்க கோரிக்கை

கருங்குழி பேரூராட்சிக்கு பொறியாளர் நியமிக்க கோரிக்கை


ADDED : மே 21, 2025 08:29 PM

Google News

ADDED : மே 21, 2025 08:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:கருங்குழி பேரூராட்சியில், நிரந்தர பொறியாளர் நியமிக்கப்படாததால், பேரூராட்சி வளர்ச்சி பணிகள் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சியில், பொறியாளர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. கடந்த சில மாதங்களாக, திருப்போரூர் பேரூராட்சி பொறியாளர், தற்காலிகமாக கருங்குழி பேரூராட்சியில் பணியாற்றி வருகிறார்.

அதனால், பணி நாட்களில் ஒரு சில நாட்கள் மட்டும், இவர் கருங்குழி பேரூராட்சிக்கு வந்து செல்கிறார்.

இதன் காரணமாக, கருங்குழி பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை, கண்காணிக்க முடியாத சூழல் உள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட துறை ரீதியான பணிகளை மேற்கொள்வதிலும் தொய்வு ஏற்படுகிறது.

எனவே, கருங்குழி பேரூராட்சிக்கென பொறியாளரை நியமிக்க, பேரூராட்சி துறை சார்ந்த உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us