sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கடப்பாக்கம் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை

/

கடப்பாக்கம் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை

கடப்பாக்கம் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை

கடப்பாக்கம் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை


ADDED : நவ 03, 2025 01:38 AM

Google News

ADDED : நவ 03, 2025 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:கடப்பாக்கத்தில், அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் கிராமத்தில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ஆலம்பரைக்குப்பம் செல்லும் சாலை ஓரத்தில் , அரசு ஆரம்பப் பள்ளி வளாகத்தில் உள்ள பழைய பள்ளி கட்டடத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு, 17 குழந்தைகள் ஆரம்ப கல்வி படித்து வருகின்றனர். மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 28 பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.

தற்போது அங்கன்வாடி மையம் செயல்படும் கட்டடம், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஓடு போட்ட கட்டடமான இது பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதனால், மழைக்காலத்தில் தண்ணீர் ஒழுகி, குழந்தைகள் கடும் அவதிப்படுகின்றனர்.

எனவே, ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் திட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, கடப்பாக்கத்தில் செயல்படும் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ள னர்.






      Dinamalar
      Follow us