sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மறைமலை நகரில் ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தை கடக்கும் பயணியர்: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

/

மறைமலை நகரில் ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தை கடக்கும் பயணியர்: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மறைமலை நகரில் ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தை கடக்கும் பயணியர்: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மறைமலை நகரில் ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தை கடக்கும் பயணியர்: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


ADDED : நவ 03, 2025 01:37 AM

Google News

ADDED : நவ 03, 2025 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:மறைமலை நகர் ரயில் நிலையத்தில், பயணியர் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடப்பதை, ரயில்வே போலீசார் தடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு -- சென்னை கடற்கரை தடத்தில், தினமும் 60 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுமட்டுமின்றி, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 60 விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இந்த தடத்தில் உள்ள மறைமலை நகர் ரயில் நிலையத்தில், டிக்கெட் கவுன்டருக்கும் முதலாவது நடைமேடைக்கும் இடையே பயணியர் தண்டவாளத்தைக் கடந்து செல்வதை தடுக்க, ரயில்வே துறை சார்பில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு இடத்தில் மட்டும் தடுப்பு உடைந்துள்ளதால், பயணியர் இந்த குறுக்கு வழியைப் பயன்படுத்தி, ரயில் நிலையம் சென்று வருகின்றனர்.

இந்த பகுதியில் தண்டவாளத்தைக் கடப்பதால், பயணியர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த இடத்தில் கடந்தாண்டு, வயதான தம்பதி தண்டவாளத்தைக் கடந்த போது, விரைவு ரயில் மோதி உயிரிழந்தனர்.

அப்போது மட்டும், வேலி அமைத்து தற்காலிகமாக, இந்த வழி அடைக்கப்பட்டது.

தற்போது மீண்டும், இந்த வழியில் பயணியர் ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர்.

எனவே, இந்த வழியை நிரந்தரமாக மூட, ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us