/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இரும்பு நடைபாதை மேம்பாலத்திற்கு கூரை அமைக்க கோரிக்கை
/
இரும்பு நடைபாதை மேம்பாலத்திற்கு கூரை அமைக்க கோரிக்கை
இரும்பு நடைபாதை மேம்பாலத்திற்கு கூரை அமைக்க கோரிக்கை
இரும்பு நடைபாதை மேம்பாலத்திற்கு கூரை அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 09, 2025 01:33 AM

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கத்தில் உள்ள இரும்பு நடைபாதை மேம்பாலத்திற்கு கூரை அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கத்தில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப் பள்ளிகள், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும் போது, விபத்தில் சிக்கியதால்,
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், இங்கு இரும்பு நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டது.
இது, 2022ம் ஆண்டு 'மாண்டஸ்' புயலின் காரணமாக பெருத்த சேதம் அடைந்தது.
கூரையில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் ஓடுகள் காற்றில் சேதமாகி, ஊசலாடின. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் இப்பகுதியை கடந்து சென்றனர்.
இதையடுத்து, 2023ல், இரும்பு நடைபாதை கூரையின் மீது இருந்த பிளாஸ்டிக் ஓடுகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாகியும், இதுவரை மீண்டும் புதிதாக கூரை அமைக்கப்படவில்லை.
இதனால் வெயில், மழை நேரத்தில் பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள், நடைபாதையை பயன்படுத்தாமல் சாலையைக் கடந்து செல்கின்றனர்.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி, புதிதாக கூரை அமைக்க, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.