sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அரசு பள்ளிக்கு கூடுதலாக கட்டடம் கட்ட கோரிக்கை

/

அரசு பள்ளிக்கு கூடுதலாக கட்டடம் கட்ட கோரிக்கை

அரசு பள்ளிக்கு கூடுதலாக கட்டடம் கட்ட கோரிக்கை

அரசு பள்ளிக்கு கூடுதலாக கட்டடம் கட்ட கோரிக்கை


ADDED : ஆக 26, 2025 10:34 PM

Google News

ADDED : ஆக 26, 2025 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:நெல்லிக்குப்பம் அரசு துவக்க பள்ளிக்கு, கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 300க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர். இதில், இரண்டு வகுப்பறை கட்டடங்கள் பழுதடைந்ததால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டு, காலி இடமாக உள்ளது.

தற்போது இப்பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு போதுமான அலுவலகம், வகுப்பறைகள் கட்டடம் இல்லை. இதனால், ஒரே கட்டடத்தில் இரண்டு வகுப்பு மாணவர்களை அமர வைத்து, பாடம் நடத்த வேண்டிய சூழல் உள்ளது.

கூடுதல் வகுப்பறை கட்டடம் கேட்டு, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசனிடம், கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அம்மனுவை எம்.பி., மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார். இந்நிலையில், மேற்கண்ட அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டித்தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us