sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பாழடைந்த பொது கழிப்பறை இடித்து அகற்ற வேண்டுகோள்

/

பாழடைந்த பொது கழிப்பறை இடித்து அகற்ற வேண்டுகோள்

பாழடைந்த பொது கழிப்பறை இடித்து அகற்ற வேண்டுகோள்

பாழடைந்த பொது கழிப்பறை இடித்து அகற்ற வேண்டுகோள்


ADDED : மார் 25, 2025 07:39 AM

Google News

ADDED : மார் 25, 2025 07:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர் : சிங்கபெருமாள்கோவிலில் உள்ள பாழடைந்த பொது கழிப்பறையை இடித்து அகற்ற வேண்டுமென, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள்கோவிலில் 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கோவில், பள்ளிகள், கடைகள் நிறைந்த ஊர். சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு இங்கு வந்து செல்கின்றனர். இங்கு அனுமந்தபுரம் சாலையில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், இலவச பொது கழிப்பறை கட்டப்பட்டது.

இதை முறையாக பராமரிக்காததால், நாளடைவில் கட்டடம் சிதிலமடைந்து, சுவரில் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்துள்ளன.

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதில் உள்ள இரும்பு கதவுகள் பெயர்ந்து, கீழே விழும் நிலையில் காணப்படுகின்றன. மோட்டார் மற்றும் மின் விளக்குகளுக்காக வழங்கப்பட்ட மின் இணைப்பு, தற்போதும் துண்டிக்கப்படாமல் உள்ளது.

மழை காலங்களில் கட்டடம் முழுதும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. அங்காடி மையம் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அருகே இதுபோன்ற சிதிலமடைந்த கட்டடம் இருப்பது பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us