sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது இடித்து புதிதாக கட்ட வேண்டுகோள்

/

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது இடித்து புதிதாக கட்ட வேண்டுகோள்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது இடித்து புதிதாக கட்ட வேண்டுகோள்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுது இடித்து புதிதாக கட்ட வேண்டுகோள்


ADDED : ஏப் 24, 2025 01:48 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூவத்துார்:பெருந்துறவு அரசுப் பள்ளி அருகே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து உள்ளதால், விபத்து அபாயம் நிலவுகிறது.

கூவத்துார் அருகே பெருந்துறவு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், அரசு ஆரம்பப் பள்ளி அருகே, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

குடிநீர் கிணற்றில் இருந்து மின்மோட்டார் வாயிலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த மேல்நிலை குடிநீர் தொட்டியின் துாண்கள் சேதமடைந்து, சிமென்ட் கலவைகள் உதிர்ந்து உள்ளன. இதனால், தொட்டி பலவீனமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.

எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக, பள்ளி அருகே பழுதடைந்துள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us