sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 கீழக்கரணை சிறுபாலத்தில் தடுப்பு அமைக்க கோரிக்கை

/

 கீழக்கரணை சிறுபாலத்தில் தடுப்பு அமைக்க கோரிக்கை

 கீழக்கரணை சிறுபாலத்தில் தடுப்பு அமைக்க கோரிக்கை

 கீழக்கரணை சிறுபாலத்தில் தடுப்பு அமைக்க கோரிக்கை


ADDED : நவ 24, 2025 03:03 AM

Google News

ADDED : நவ 24, 2025 03:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: மறைமலை நகர் அடுத்த கீழக்கரணையில், சிறு பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறைமலை நகர் நகராட்சி 17வது வார்டு, காமராஜர் சாலை கீழக்கரணையில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த சாலை வழியாக மறைமலை நகர் சிப்காட் பகுதியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு, வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.

மேலும் சுற்றியுள்ள சித்தமனுார், பெரிய செங்குன்றம் உள்ளிட்ட கிராம மக்கள், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சாலையில், அம்மன் கோவில் அருகே உள்ள வளைவில், சாலை குறுக்கே மழைநீர் செல்லும் சிறு கால்வாய் உள்ளது.

இந்த கால்வாயில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின் இருபுறமும் எந்தவித தடுப்புகளும் அமைக்கப்படவில்லை.

இதனால், சாலை சந்திப்பு வளைவில் திரும்பும் வாகன ஓட்டிகள், எதிர்பாராத விதமாக சாலையோரம் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

அதேபோல், எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு ஒதுங்கி வழிவிடும் இருசக்கர வாகன ஓட்டிகள், தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

குறிப்பாக, இரவு நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகின்றன.

எனவே, இந்த சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us