sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பொன்மாரில் வங்கி கிளை அமைக்க வேண்டுகோள்

/

பொன்மாரில் வங்கி கிளை அமைக்க வேண்டுகோள்

பொன்மாரில் வங்கி கிளை அமைக்க வேண்டுகோள்

பொன்மாரில் வங்கி கிளை அமைக்க வேண்டுகோள்


ADDED : ஜன 22, 2025 07:18 PM

Google News

ADDED : ஜன 22, 2025 07:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:வளர்ந்து வரும் ஊராட்சியான பொன்மாரில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை இல்லாததால், வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர்.

திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம் அருகே பொன்மார் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் ஹவுசிங் போர்டு, மலைத்தெரு, போலச்சேரி என, துணை கிராமங்கள் உள்ளன.

மேலும், இரண்டு தனியார் கல்லுாரிகள், பள்ளிகள், அடுக்குமாடி குடியிருப்பு, மனை பிரிவுகள் உள்ளன.

இப்பகுதியில் வங்கி கிளை இல்லாததால் மாம்பாக்கம், கண்டிகை, மேடவாக்கம், கேளம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் வங்கிகளுக்கு பொதுமக்கள் சென்று சிரமப்படுகின்றனர்.

எனவே, பொன்மார் மக்களின் பிரச்னையை தீர்க்க, இப்பகுதியில் தனியார் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளை ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us