/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி பராமரிக்க வேண்டுகோள்
/
கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி பராமரிக்க வேண்டுகோள்
கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி பராமரிக்க வேண்டுகோள்
கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி பராமரிக்க வேண்டுகோள்
ADDED : மே 12, 2025 11:51 PM

அச்சிறுபாக்கம் :கோடை காலத்தில் நீர்நிலைகள் வறண்டுள்ள நிலையில், மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகளின் தாகம் தீர்க்க கட்டப்பட்ட கால்நடை குடிநீர் தொட்டிகள், நீரின்றி காட்சிப் பொருளாக உள்ளன. இவற்றில், தண்ணீர் நிரப்ப வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழக அரசு ஊரக வளர்ச்சித் துறை வாயிலாக ஊராட்சிகள்தோறும் கால்நடை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதன்படி, அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 59 ஊராட்சிகளிலும், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், தலா 20,000 ரூபாய் செலவில், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இத்திட்டத்தை, ஊராட்சி நிர்வாகம் நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தின் பெரும்பாலான ஊராட்சிகளில், இந்த கால்நடை குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பாமல், காட்சி பொருளாகவே காணப்படுகின்றன.
தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நீர்நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன.
எனவே, கால்நடைகளுக்காக கட்டிய குடிநீர் தொட்டிகளில், ஊராட்சிகள் தண்ணீர் நிரப்பி பராமரிக்க ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.