sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஊராட்சி மன்ற புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை

/

ஊராட்சி மன்ற புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை

ஊராட்சி மன்ற புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை

ஊராட்சி மன்ற புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை


ADDED : ஆக 29, 2025 12:48 AM

Google News

ADDED : ஆக 29, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர், செம்பூர் ஊராட்சியில், புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத்தை, பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

பவுஞ்சூர் அருகே உள்ள செம்பூர் ஊராட்சியில், 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டடம் நாளடைவில் பழுதடைந்ததால், மழைக்காலத்தில் கோப்புகளை பாதுகாக்க முடியாமல், அதிகாரிகள் சிரமப்பட்டனர்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எட்டு ஆண்டுகளுக்கு முன், இ - சேவை மையத்தில் உள்ள கட்டடத்திற்கு ஊராட்சி அலுவலகம் மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

இந்த இ - சேவை மைய கட்டடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் கிராம சபை கூட்டம், மன்ற கூட்டங்கள் உள்ளிட்டவை நடத்த முடியாத நிலை உள்ளது. கிராம சபை கூட்டங்களுக்கு வரும் மக்கள், இடவசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை எழுந்தது. அதன்படி கடந்தாண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 39.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.

ஆனால், தற்போது வரை இந்த புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை.

எனவே, ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, செம்பூர் கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us