/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பவுஞ்சூர் - சூணாம்பேடு இடையே டவுன் பஸ் இயக்க கோரிக்கை
/
பவுஞ்சூர் - சூணாம்பேடு இடையே டவுன் பஸ் இயக்க கோரிக்கை
பவுஞ்சூர் - சூணாம்பேடு இடையே டவுன் பஸ் இயக்க கோரிக்கை
பவுஞ்சூர் - சூணாம்பேடு இடையே டவுன் பஸ் இயக்க கோரிக்கை
ADDED : நவ 27, 2025 04:17 AM
பவுஞ்சூர்: பவுஞ்சூர் - சூணாம்பேடு இடையே நகர பேருந்து இயக்கவேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட சூணாம்பேடு, பவுஞ்சூர், வெடால், அம்மனுார், இரணியசித்தி உள்ளிட்ட ஊராட்சிகளில் 20,௦௦௦க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
செய்யூர் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம்,சார் - பதிவாளர் அலுவலகம், அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு கலைக் கல்லுாரி செயல்படுகிறது.
ஆகையால் சூணாம்பேடு மற்றும் பவுஞ்சூர் பகுதியில் இருந்து தினசரி நுாற்றுக்கணக்கான மக்கள் மற்றும் மாணவர்கள் செய்யூர் பகுதிக்கு வருகின்றனர். செய்யூர் வழியாக சூணாம்பேடு - பவுஞ்சூர் இடையே அரசு பேருந்து வசதி இல்லாததால், இருசக்கர வாகனம் அல்லது ஷேர் ஆட்டோக்களில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
செய்யூர் வழியாக சூணாம்பேடு-பவுஞ்சூர் இடையே அரசு பேருந்து வசதி ஏற்படுத்தினால், சித்தாமூர், லத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் எளிதாக செய்யூர் பகுதிக்கு வந்து செல்ல முடியும்.
ஆகையால் போக்குவரத்துத் துறை சார்ந்த அதிகாரிகள், மக்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியரின் நலன் கருதி, செய்யூர் வழியாக சூணாம்பேடு - பவுஞ்சூர் இடையே நகர பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

