sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 அய்யனார் கோவில் குளம் சீரமைக்க கோரிக்கை

/

 அய்யனார் கோவில் குளம் சீரமைக்க கோரிக்கை

 அய்யனார் கோவில் குளம் சீரமைக்க கோரிக்கை

 அய்யனார் கோவில் குளம் சீரமைக்க கோரிக்கை


ADDED : நவ 27, 2025 04:16 AM

Google News

ADDED : நவ 27, 2025 04:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம். நவ. 27-: சிலாவட்டம் அடுத்த அய்யனார் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டுமென, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சிலாவட்டம் ஊராட்சியில், சென்னை- - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள அய்யனார் கோவில் குளம் முழுதும் ஆகாய தாமரை மற்றும் புற்கள் வளர்ந்து, பாசி படர்ந்து உள்ளது. மேலும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி உள்ளது.

தண்ணீரில் பாசி படர்ந்து உள்ளதால், கொசு உற்பத்தியும் அதிகமாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், இப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய அய்யனார் கோவில் குளம், தற்போது பயன்பாடு இன்றி, குப்பை கொட்டும் பகுதியாக மாறி உள்ளது.

நீர் ஆதாரத்தை காக்கும் பொருட்டு, குளத்தில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும்.

எனவே, குளத்தின் உள்பகுதியை சீரமைத்து, குளக்கரை பகுதிகளில் நிழல் தரும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும், கழிவுகளை அகற்றவும் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us