/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலுார் சாலையில் வேகத்தடைக்கு வர்ணம் பூச கோரிக்கை
/
பாலுார் சாலையில் வேகத்தடைக்கு வர்ணம் பூச கோரிக்கை
ADDED : நவ 06, 2025 11:53 PM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அருகே, பாலுார் சாலையில் உள்ள வேகத்தடைகள் தெரியும் வகையில், வர்ணம் பூச வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கபெருமாள் கோவில் - பாலுார் சாலை 13 கி.மீ., துாரம் நீளம் உடையது. இந்த சாலையை பாலுார், ரெட்டிபாளையம், வெண்பாக்கம், கொளத்துார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் ரெட்டிபாளையம், பாலுார் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளுக்கு லோடு ஏற்றிச்செல்லும் லாரிகள், அதிகளவில் சென்று வருகின்றன.
இந்த சாலை செங்கல்பட்டு -- காஞ்சிபுரம் சாலையின் இணைப்பு சாலையாக உள்ளது.
இந்த சாலையில் கொளத்துார் பகுதியில், அடுத்தடுத்து மூன்று வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகள் புதிதாகவும், இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரியாத வகையிலும் உள்ளன. இதனால், விபத்து அபாயம் நிலவுகிறது.
கொளத்துார், வில்லியம்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் 'குடி'மகன்கள், இதனால் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, இந்த வேகத்தடைகளில் இரவில் ஒளிரும் விளக்குகள் மற்றும் வர்ணம் பூச, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

