sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 திருப்போரூரில் விடுபட்ட மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை

/

 திருப்போரூரில் விடுபட்ட மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை

 திருப்போரூரில் விடுபட்ட மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை

 திருப்போரூரில் விடுபட்ட மக்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை


ADDED : நவ 17, 2025 07:50 AM

Google News

ADDED : நவ 17, 2025 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்: திருப்போரூர் வட்டத்தில் கடந்த முறை பட்டா வழங்காமல் விடுபட்ட மக்களுக்கு, பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்போரூர் வட்டத்தில் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இந்த வட்டத்தில் அரசு நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்த சிலருக்கு, வருவாய்த் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டு, பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தகுதிகள் இருந்தும் பலருக்கு, பட்டா வழங்கப்படவில்லை. வீட்டிற்கு பட்டா இல்லாததால், அரசு சார்ந்த திட்டங்களான வங்கிக் கடன், தொகுப்பு வீடுகள், மின் இணைப்பு, கனவு இல்லம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் பெறுவதில் சிக்கல் நிலவி வருகிறது.

இலவச பட்டா கோரி இப்பகுதி மக்கள், 'உங்களுடன் ஸ்டாலின் முகாம், மாவட்ட குறைதீர் கூட்டம்' என, பல்வேறு முகாம்களில் மனு அளித்து வருகின்றனர். ஆனால், இதுவரை பட்டா கிடைக்கவில்லை.

எனவே, திருப்போரூர் வட்டத்தில் கடந்த முறை பட்டா வழங்காமல் விடுபட்ட மக்களுக்கு, பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us