sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அச்சிறுபாக்கம் அரசு மருத்துவமனையில் இருக்கை வசதி ஏற்படுத்த கோரிக்கை

/

அச்சிறுபாக்கம் அரசு மருத்துவமனையில் இருக்கை வசதி ஏற்படுத்த கோரிக்கை

அச்சிறுபாக்கம் அரசு மருத்துவமனையில் இருக்கை வசதி ஏற்படுத்த கோரிக்கை

அச்சிறுபாக்கம் அரசு மருத்துவமனையில் இருக்கை வசதி ஏற்படுத்த கோரிக்கை


ADDED : மே 05, 2025 01:30 AM

Google News

ADDED : மே 05, 2025 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் அமரும் வகையில் இருக்கை வசதி ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் 59 ஊராட்சிகள் உள்ளன. 1.50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.

மக்கள் தொகையின் அடிப்படையில், அச்சிறுபாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் எல்.எண்டத்துார், ஒரத்தி, ராமாபுரம் ஊராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

அச்சிறுபாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 5 பொது மருத்துவர்கள் உள்ளனர். 6 செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். பிரசவ வார்டில் 30 படுக்கை வசதிகள் உள்ளன.

தினமும் 350 க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் புறநோயாளிகள், இருக்கை வசதி இல்லாததால், மரத்தடி நிழல் மற்றும் மருத்துவமனை கட்டடத்தின் வாசல் படிகள், வராண்டா பகுதிகளில் அமருகின்றனர்.

எனவே, மருத்துவமனை வளாகத்தில், முதியோர்கள் மற்றும் புறநோயாளிகள், நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் அமரும் வகையில், இருக்கைகள் அமைத்து தர வேண்டுமென பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us