/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை விரிவாக்க பணிகள் குறித்து தகவல் பலகை வைக்க கோரிக்கை
/
சாலை விரிவாக்க பணிகள் குறித்து தகவல் பலகை வைக்க கோரிக்கை
சாலை விரிவாக்க பணிகள் குறித்து தகவல் பலகை வைக்க கோரிக்கை
சாலை விரிவாக்க பணிகள் குறித்து தகவல் பலகை வைக்க கோரிக்கை
ADDED : ஏப் 25, 2025 02:51 AM

சித்தாமூர்:செய்யூர் - போளூர் மாநில நெடுஞ்சாலையில் இருந்து தொன்னாடு, ஒரங்காவலி, நீர்பெயர் போன்ற கிராமங்களுக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அதுகுறித்த தகவல் பலகை வைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
சித்தாமூர் அடுத்த தொன்னாடு கிராமத்தில், செய்யூர் - போளூர் மாநில நெடுஞ்சாலையில் இருந்து தொன்னாடு, ஒரங்காவலி, நீர்பெயர் போன்ற கிராமங்களுக்குச் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.
இந்த சாலையில் கடந்த மூன்று மாதங்களாக, விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், விரிவாக்கப் பணிகள் குறித்து எந்த இடத்திலும் தகவல் பலகை அமைக்கப்படாமல், பணிகள் நடைபெறுகின்றன.
எந்த திட்டத்தில் பணிகள் நடைபெறுகின்றன, மதிப்பீடு, நீளம், அகலம் மற்றும் மேற்பார்வை அதிகாரிகளின் விபரங்கள் இல்லாமல் உள்ளதால், சாலை விரிவாக்கப் பணிகளில் உள்ள குறைகளை தெரிவிக்க, பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சாலைப் பணிகள் நடைபெறும் அனைத்து பகுதிகளிலும், அவசியம் தகவல் பலகை அமைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.

