/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாணவர்கள் விடுதி வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தை அகற்ற கோரிக்கை
/
மாணவர்கள் விடுதி வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தை அகற்ற கோரிக்கை
மாணவர்கள் விடுதி வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தை அகற்ற கோரிக்கை
மாணவர்கள் விடுதி வளாகத்தில் உள்ள பழைய கட்டடத்தை அகற்ற கோரிக்கை
ADDED : பிப் 20, 2026 05:49 AM

செய்யூர்: செய்யூரில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி மாணவர் விடுதி வளாகத்தில், பழுதடைந்துள்ள கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூரில் செயல்படும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆறு முதல் பிளஸ் 2 வரை படித்து வருகின்றனர்.
நீண்ட துாரத்தில் இருந்து வரும் மாணவர்கள் தங்கி படிப்பதற்காக, பள்ளி அருகே ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக அரசு மாணவர் விடுதி துவங்கப்பட்டது.
இந்த விடுதி கட்டடம் நாளடைவில் பழுதடைந்ததால், புதிதாக விடுதி கட்டடம் அமைக்கப்பட்டு தற்போது மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பழைய விடுதி கட்டடம் அகற்றப்படாமல் உள்ளதால் விஷப்பூச்சிகளின் வாழ்விடமாக மாறி வருகிறது. இதனால், பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆகையால் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விடுதி வளாகத்தில் உள்ள பழுதடைந்த கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

