sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 வையாவூர் சமூக நலக்கூடத்தை சீரமைக்க கோரிக்கை

/

 வையாவூர் சமூக நலக்கூடத்தை சீரமைக்க கோரிக்கை

 வையாவூர் சமூக நலக்கூடத்தை சீரமைக்க கோரிக்கை

 வையாவூர் சமூக நலக்கூடத்தை சீரமைக்க கோரிக்கை


ADDED : டிச 28, 2025 06:09 AM

Google News

ADDED : டிச 28, 2025 06:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்,':வையாவூர் ஊராட்சியில் உள்ள சமூக நலக்கூடத்தை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வையாவூர் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் தனியார் நிறுவனங்களில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் தங்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளை மதுராந்தகம், கருங்குழி, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடத்தி வருகின்றனர்.

இதனால் அதிக செலவுடன், வீண் அலைச்சலும் ஏற்படுகிறது.

இங்கு, திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடச பெருமாள் கோவில் அடிவாரம் பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த சமூக நலக்கூடம், தற்போது விரிசல் அடைந்து, பயன்பாடின்றி உள்ளது.

எனவே, பழுதடைந்த இந்த சமூக நலக்கூட கட்டடத்தை சீரமைக்க, மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us