sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 வேன் மீது லாரி மோதல் சுற்றுலா வந்த 19 பேர் காயம்

/

 வேன் மீது லாரி மோதல் சுற்றுலா வந்த 19 பேர் காயம்

 வேன் மீது லாரி மோதல் சுற்றுலா வந்த 19 பேர் காயம்

 வேன் மீது லாரி மோதல் சுற்றுலா வந்த 19 பேர் காயம்


ADDED : டிச 28, 2025 06:10 AM

Google News

ADDED : டிச 28, 2025 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே, சுற்றுலா வேன் மீது லாரி மோதியதில், 19 பேர் காயமடைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம், களிவண்ணன்பேட்டையைச் சேர்ந்தவர் யேசுதாஸ், 50.

இவர் நேற்று முன்தினம், தஞ்சாவூரில் இருந்து தன் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேருடன், தனக்குச் சொந்தமான சொகுசு வேனில், சென்னைக்கு சுற்றுலா வந்துள்ளார்.

நேற்று காலை 6:00 மணியளவில், கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் வரும் போது, முன்னால் சென்ற வாகனம் மீது மோதாமல் இருக்க, யேசுதாஸ் வேனின் வேகத்தை குறைத்துள்ளார்.

அப்போது, சவுக்கு மரங்களை ஏற்றிக் கொண்டு பின்னால் வந்த லாரி, இவர்களது வேன் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இதில் சொகுசு வேன் நிலை தடுமாறி, சாலை மையத்தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. வேனை ஓட்டிவந்த யேசுதாஸ் உட்பட 19 பேரும், காயத்துடன் அலறி துடித்தனர்.

உடனே, அங்கிருந்தோர் அவர்களை மீட்டு, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். இந்த விபத்தால் நேற்று காலை, அப்பகுதியில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us