/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமான 'சிசிடிவி' கேமராக்களை சீரமைக்க வேண்டுகோள்
/
சேதமான 'சிசிடிவி' கேமராக்களை சீரமைக்க வேண்டுகோள்
ADDED : செப் 08, 2025 12:35 AM

மதுராந்தகம்:கக்கிலப்பேட்டை- திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை ஓரம் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்துள்ளதை சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் காவல் துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடன், சாலையின் முக்கிய சந்திப்பு பகுதிகள், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இதன் வாயிலாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, தப்பிச்செல்லும் நபர்களை அடையாளம் கண்டு, கைது செய்வதற்கு காவல் துறையினருக்கு பெரும் உதவியாக இருந்தது.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கருங்குழி சந்திப்பு, கக்கிலப்பேட்டை வழியாக திருக்கழுக்குன்றம் வரை செல்லும் நெடுஞ்சாலை 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலை ஆகும்.
இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையை கடக்கும் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். இதன் காரணமாக, கக்கிலபேட்டை சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்நிலையில் சில மாதங்களாக கேமராக்கள் பழுதடைந்துள்ளன.
இதனால், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் வாகன விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச்செல்லும் நபர்களை கண்டறிவதில், காவல் துறைக்கு சிக்கல் ஏற்படுகிறது.
எனவே, சேதமடைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.