sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நெடுமரம் வழியாக டவுன் பஸ் இயக்க வேண்டுகோள்

/

நெடுமரம் வழியாக டவுன் பஸ் இயக்க வேண்டுகோள்

நெடுமரம் வழியாக டவுன் பஸ் இயக்க வேண்டுகோள்

நெடுமரம் வழியாக டவுன் பஸ் இயக்க வேண்டுகோள்


ADDED : அக் 18, 2024 01:32 AM

Google News

ADDED : அக் 18, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் - புதுப்பட்டினம் இடையே, கல்பாக்கம் பணிமனையில் இருந்து, டி2 தடம் எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது.

பெரும்பாக்கம், ஆக்கினாம்பட்டு, நெல்வாய்பாளையம், மலையூர், கூவத்துார் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, தற்போது இயக்கப்படுகிறது.

நெடுமரம், கரிக்காமலை, வேட்டக்காரக்குப்பம் வழியாக, அரசு பேருந்துகளே இயக்கப்படாததால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் வாயிலாக, கூவத்துார், பவுஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

பள்ளி மாணவர்களின் நலன் கருதி, டி2 பேருந்தை கூவத்துாரில் இருந்து நெடுமரம், கரிக்காமலை, ஆக்கினாம்பட்டு வழியாக, செய்யூர் வரை இயக்க, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us