/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சீக்கனாங்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டுகோள்
/
சீக்கனாங்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டுகோள்
சீக்கனாங்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டுகோள்
சீக்கனாங்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டுகோள்
ADDED : ஆக 27, 2025 10:30 PM
கூவத்துார்:சீக்கனாங்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கக்கோரி பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கூவத்துார் அருகே சீக்கனாங்குப்பம் கிராமத்தின் கிழக்குக் கடற்கரைச் சாலை பேருந்து நிறுத்தம் உள்ளது.
இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், கல்லுாரிகள் இயங்குகின்றன.
வேலுார், ஆட்சிவிளாகம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்னை, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு செல்ல இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.
நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர், இங்கு நிழற்குடை இல்லாததால் பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் வெயிலில் நீண்ட நேரம் நின்றுகொண்டு காத்திருக்கும் சூழல் உள்ளதால் பயணியர் சிரமப்படுகின்றனர்.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.