sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பேருந்தில் நகை திருடிய பெண்ணுக்கு 'காப்பு'

/

பேருந்தில் நகை திருடிய பெண்ணுக்கு 'காப்பு'

பேருந்தில் நகை திருடிய பெண்ணுக்கு 'காப்பு'

பேருந்தில் நகை திருடிய பெண்ணுக்கு 'காப்பு'


ADDED : ஆக 12, 2025 11:03 PM

Google News

ADDED : ஆக 12, 2025 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே, பேருந்தில் பயணியிடம் நகை திருடிய பெண்ணை, சக பயணியர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

உத்திரமேரூர் அடுத்த கடச்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேமா, 41.

இவர், நேற்று காலை 11:30 மணியளவில், செங்கல்பட்டில் இருந்து உத்திர மேரூர் செல்லும் தடம் எண்: 'டி68' பேருந்தில் பயணம் செய்தார்.

நெல்வாய் நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது, பெண் ஒருவர் அவசர அவசரமாக இறங்கி ஓடியுள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த பிரேமா, தன் பையில் பார்த்த போது, அதில் வைத்திருந்த நான்கு சவரன் நகை காணாமல் போனது தெரிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர், கூச்சலிட்டுள்ளார்.

உடனே, சக பயணியர் அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து, படாளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், நகை திருட்டில் ஈடுபட்டது, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா, 61, என தெரிந்தது.

பின், போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us