sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஓதியூரில் புதிய அங்கன்வாடி பகுதிவாசிகள் வலியுறுத்தல்

/

ஓதியூரில் புதிய அங்கன்வாடி பகுதிவாசிகள் வலியுறுத்தல்

ஓதியூரில் புதிய அங்கன்வாடி பகுதிவாசிகள் வலியுறுத்தல்

ஓதியூரில் புதிய அங்கன்வாடி பகுதிவாசிகள் வலியுறுத்தல்


ADDED : பிப் 05, 2025 12:35 AM

Google News

ADDED : பிப் 05, 2025 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதியூர் கிராமத்தில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள கங்கையம்மன் கோவில் எதிரே, அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.

இதில், 15 குழந்தைகள் படிக்கின்றனர். மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 23 பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.

அங்கன்வாடி மையம் செயல்படும் கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இதனால், பராமரிப்பு இல்லாமல், நாளடைவில் கட்டடம் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதனால், மழைக் காலத்தில் தண்ணீர் ஒழுகி, குழந்தைகள் கடும் அவதிப்படுகின்றனர்.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, ஓதியூர் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us