/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நீர்த்தேக்க தொட்டி படுமோசம் தாதங்குப்பம்வாசிகள் அச்சம்
/
நீர்த்தேக்க தொட்டி படுமோசம் தாதங்குப்பம்வாசிகள் அச்சம்
நீர்த்தேக்க தொட்டி படுமோசம் தாதங்குப்பம்வாசிகள் அச்சம்
நீர்த்தேக்க தொட்டி படுமோசம் தாதங்குப்பம்வாசிகள் அச்சம்
ADDED : நவ 11, 2024 02:32 AM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே தொண்டமநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட தாதங்குப்பம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
குடியிருப்பு பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி உள்ளது.
இந்த நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு இல்லாமல், நாளடைவில் சேதமடைந்து, துாண்கள் பலவீனமாக இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் ஏற்றுவது நிறுத்தப்பட்டது.
தற்போது, கிணற்றில் இருந்து நேரடியாக குடிநீர் குழாய்களை இணைத்து மின்மோட்டார் வாயிலாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நேரடியாக மின் மோட்டாரில் இணைக்கப்பட்டுள்ளதால், குழாய்களின் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்படுகிறது. மேலும், மின்சாரம் இல்லாத நேரங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு, கிராமவாசிகளின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.