sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கண்காணிப்பு கேமரா அமைக்க சிறுங்குன்றம் வாசிகள் கோரிக்கை

/

கண்காணிப்பு கேமரா அமைக்க சிறுங்குன்றம் வாசிகள் கோரிக்கை

கண்காணிப்பு கேமரா அமைக்க சிறுங்குன்றம் வாசிகள் கோரிக்கை

கண்காணிப்பு கேமரா அமைக்க சிறுங்குன்றம் வாசிகள் கோரிக்கை


ADDED : மார் 17, 2024 02:17 AM

Google News

ADDED : மார் 17, 2024 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த சிறுங்குன்றம் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகள் விவசாயம் மற்றும் வனத்துறை சார்ந்த பகுதியாக உள்ளது.

இந்த கிராம பகுதிகளிலிருந்து மறைமலை நகர், எஸ்.பி.கோவில், செங்கல்பட்டு, திருப்போரூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலைகள் என, பல்வேறு தேவைகளுக்கு மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் தினமும் சென்று வருகின்றனர்.

இவ்வாறு சிறுங்குன்றம், மருதேரி உள்ளிட்ட கிராமங்களுக்கு இரவு நேரங்களில் வீடு திரும்புவோர் அச்சத்துடன் செல்கின்றனர்.

கிராமப்புற பகுதியாகவும், வனத்துறை சார்ந்த பகுதியாகவும் இருப்பதால், பல நேரங்களில், இரவு 8:00 மணிக்கு மேல் ஆள்நடமாட்டமும், போக்குவரத்தும் குறைந்துக்கொண்டே வரும்.

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம், வழிப்பறி திருடர்கள் மருதேரி- எஸ்.பி.கோவில் தடம் சார்ந்த அரசு பேருந்தில்தங்கிருந்த ஓட்டுனர்,நடத்துனரை தாக்கி பணப்பை, மொபைல் போனை பறித்துசென்றனர். அதேபோல், மினிவேனை மடக்கி, அதன் ஓட்டுனரை தாக்கி மொபைல் போன் மற்றும் பணம் பறித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

எனவே, குற்றச்சம்பவங்கள் தடுக்கவும், இப்பகுதி வாசிகளின் அச்சத்தை போக்கும் வகையிலும், மருதேரி- கொண்டங்கி சாலை; சிறுங்குன்றம் நெல் கொள்முதல் மையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டும் என, இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us