/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் பஜாரில் குடிநீர் வசதி பகுதிவாசிகள் வேண்டுகோள்
/
செய்யூர் பஜாரில் குடிநீர் வசதி பகுதிவாசிகள் வேண்டுகோள்
செய்யூர் பஜாரில் குடிநீர் வசதி பகுதிவாசிகள் வேண்டுகோள்
செய்யூர் பஜாரில் குடிநீர் வசதி பகுதிவாசிகள் வேண்டுகோள்
ADDED : டிச 23, 2024 02:24 AM
செய்யூர்:செய்யூர் பஜார் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம், நீதிமன்றம், அரசு பள்ளிகள், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
நுாறுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
மேலும் தேவராஜபுரம், சால்ட் காலனி, மேற்கு செய்யூர் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வெளியூர்களுக்குச் செல்ல, செய்யூர் பஜார் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.
இதனால், தினசரி நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் பஜார் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
பொதுமக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் செய்யூர் பஜார் பகுதியில் குடிநீர் வசதி இல்லாததால் குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடும் சிரமப்படுகின்றனர்.
அதனால், துறை சார்ந்த அதிகாரிகள், பஜாரின் மையப் பகுதியான பழைய காவல் நிலைய கட்டடம் உள்ள இடத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.