sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கைவிடப்பட்ட கல்குவாரியால் விபத்து ஏற்படும் அபாயம்

/

கைவிடப்பட்ட கல்குவாரியால் விபத்து ஏற்படும் அபாயம்

கைவிடப்பட்ட கல்குவாரியால் விபத்து ஏற்படும் அபாயம்

கைவிடப்பட்ட கல்குவாரியால் விபத்து ஏற்படும் அபாயம்


ADDED : மே 11, 2025 01:41 AM

Google News

ADDED : மே 11, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் அருகே ஓணம்பாக்கம் கிராமத்தில் அரியனுார் செல்லும் சாலை ஓரத்தில் கைவிடப்பட்ட கல் குவாரி உள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன் செயல்பட்டு வந்த குவாரி அனுமதி காலம் நிறைவு பெற்றதால் எட்டு ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்டது.

காலாவதியாகி கைவிடப்பட்ட இந்த குவாரி 100 முதல் 250 அடி ஆழத்திற்கும் மேல் பள்ளம் கொண்டதாக உள்ளது.

பள்ளத்தை சுற்றி எவ்வித தடுப்புகளும்,வேலிகளும் இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது.

இதனால் மலை மற்றும் மலையடிவாரங்களில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், பயன்பாடற்ற கல்குவாரி அருகே செல்லும்போது பள்ளத்தில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-

ஓணம்பாக்கம், எல்.என்.,புரம் ,நாகமலை போன்ற சுற்று வட்டார பகுதிகளில் கால்நடைகள் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது.

கைவிடப்பட்ட கல் குவாரி பள்ளத்தை சுற்றி தடுப்புகள் இல்லாததால் மேச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் தவறி பள்ளத்தில் விழும் அபாய நிலை உள்ளது. மேலும் சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள், ஆபத்தான நிலையில் உள்ள கல் குவாரிகளை ஆய்வு செய்து தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us