sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நதிநீர் மேலாண்மை பாடத்திட்டம் மத்திய அரசு வழக்கறிஞர் கோரிக்கை

/

நதிநீர் மேலாண்மை பாடத்திட்டம் மத்திய அரசு வழக்கறிஞர் கோரிக்கை

நதிநீர் மேலாண்மை பாடத்திட்டம் மத்திய அரசு வழக்கறிஞர் கோரிக்கை

நதிநீர் மேலாண்மை பாடத்திட்டம் மத்திய அரசு வழக்கறிஞர் கோரிக்கை


ADDED : அக் 20, 2024 12:25 AM

Google News

ADDED : அக் 20, 2024 12:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த பையனுார் விநாயகா மிஷன் சட்டப் பள்ளியில், நதிகள் மேலாண்மை பற்றி, சர்வதேச கருத்தரங்கு இரண்டு நாட்கள் நடந்தது.

பல்வேறு தலைப்புகளில் நடந்த கருத்தரங்கில், நதிகளின் நிலையான மேலாண்மை, சட்ட கட்டமைப்புகள் மற்றும் நீர் வளங்களின் சமூக அரசியல் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், நதி நிர்வாகத்தின் பிரச்னைகள், நிலையான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. நதிகள் குறித்த புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

பல்வேறு நாடுகளிலிருந்து பேராசிரியர்கள், மாணவர்கள் என 100க்கும் மேற்பட்டோர், ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.

இதில், 40க்கும் மேற்பட்ட கட்டுரைகளை தேர்வு செய்து, அதில் சிறந்த 12 கட்டுரை சமர்ப்பித்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், விருதுகள் வழங்கப்பட்டன.

கருத்தரங்கு நிறைவு நாளான நேற்று, மத்திய அரசின் வழக்கறிஞர் கோபிநாதன் பேசியதாவது:

நதிநீர் மேலாண்மை குறித்த நேர்த்தியான சிறப்பு பாடத்திட்டம், இந்தியாவில் இல்லை. அதாவது, இளங்கலை போன்ற படிப்புகள் இல்லை.

அதனால், அரசு ஊழியர்கள், பல்கலை, கல்லூரி பேராசிரியர்கள், சமூக சேவகர்கள் இணைந்து, நல்ல பாடத்திட்டத்தை வகுக்க வேண்டும்.

அதற்கு, இந்த விநாயகா மிஷன் சட்ட பள்ளியானது, முயற்சி எடுக்க வேண்டும். கருத்தரங்கில் கூடுதலான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

நதி நீர் மேலாண்மை என்பது, எவ்வாறான உயிர்நாடி பிரச்னை என்பதை கருத்தரங்கில் தெரியவந்துள்ளது. இதை தீர்க்க பல்வேறு தடைகள் இருக்கலாம். நாம் அனைவரும் சேர்ந்து இதை முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்வில், சட்டப்பள்ளி 'டீன்' ஆனந்த் பத்மநாபன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் ஹெல்சின்கி, பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை சட்டத்தின் இணை பேராசிரியர் டாக்டர் டீனா பலோனிட்டி, முதல் நாள் கருத்தரங்கை துவக்கினர்.

மேகா பைன் அபியான் அறக்கட்டளை அறங்காவலர் ஏக்லவியா பிரசாத், இந்திய சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு சட்ட ஆலோசகர் ஷாவாஹிக் சித்திக், சுரானா அண்டு சுரானா இன்டர்நேஷனல் அட்டர்னிஸ் மூத்த உயர் அதிகாரி சஞ்சய் மேத்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us