sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கல் குவாரி லாரிகளால் சாலை சேதம்: புழுதி பறப்பதால் அவதி

/

கல் குவாரி லாரிகளால் சாலை சேதம்: புழுதி பறப்பதால் அவதி

கல் குவாரி லாரிகளால் சாலை சேதம்: புழுதி பறப்பதால் அவதி

கல் குவாரி லாரிகளால் சாலை சேதம்: புழுதி பறப்பதால் அவதி


ADDED : செப் 13, 2025 01:21 AM

Google News

ADDED : செப் 13, 2025 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கல் குவாரி லாரிகளால், கொளத்துார் கிராமத்திற்குச் செல்லும் சாலை சேதமடைந்து புழுதி பறப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சித்தாமூர் அருகே, மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லாமூர் கிராமத்தில், ரோட்டுக்கடை பகுதியில் இருந்து கொளத்துார் செல்லும் தார்ச்சாலை உள்ளது.

கொளத்துார், பெருவெளி, நல்லாமூர், கோட்டிவாக்கம் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான சாலையாக, இச்சாலை உள்ளது.

கொளத்துார் பகுதியில் செயல்படும் கல் குவாரிக்கு, இந்த சாலையில் தினமும் ஏராளமான லாரிகள் அதிக பாரம் ஏற்றிச் செல்கின்றன.

இதனால், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டும், தார் பெயர்ந்தும், இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத வகையில் சாலை சேதமடைந்துள்ளது. இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர், தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.

அத்துடன், கனரக வாகனங்கள் செல்லும் போது சாலையே தெரியாத அளவிற்கு புழுதி பறப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.

ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us