/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 23, 2024 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூரில், பையனூர் விநாயக மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
இதில், கல்லுாரியைச் சேர்ந்த நாட்டு நலப்பணி திட்ட மாணவ - மாணவியர் 100க்கும் மேற்பட்டோர், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
'சீட் பெல்ட்' அணிவதன் அவசியம், அதிவேகத்தால் ஏற்படும் விளைவுகள், ஹெல்மெட் கட்டாயம் அணிதல், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டக் கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.