/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின் விளக்கில்லாத சாலை: ஜானகிபுரத்தினர் அவதி
/
மின் விளக்கில்லாத சாலை: ஜானகிபுரத்தினர் அவதி
ADDED : ஜன 01, 2025 12:15 AM

செங்கல்பட்டு,
செங்கல்பட்டு அருகில், ஜானகிபுரம் கிராமத்திற்குச் செல்லும் சாலையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருக்கழுக்குன்றம் ஒன்றியம், மோசிவாக்கம் ஊராட்சி, ஜானகிபுரம் கிராமத்தில், 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிப்போர் 2 கி.மீ., தொலைவிற்கு ரயில்வே சுரங்கப்பாதையைக் கடந்து பேருந்தில் ஏறி, திருமணி வழியாக செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு, அடிப்படை தேவைகளுக்காக சென்று வருகின்றனர்.
இக்கிராமத்தில், வீடுகளின் அருகிலுள்ள தெருக்களில் மட்டும் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஜானகிபுரம் கூட்டு சாலையில் இருந்து, சுரங்கப்பாதையை கடக்கும் வரை மின் விளக்குகள் இல்லை.
இதனால், இரவில் இச்சாலையில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் சாலையில் உள்ள ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.
எனவே, இந்த சாலையில் மின் விளக்குகள் அமைத்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.