sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரூ.5 கோடியில் சாலை பணி சித்தாமூரில் மீண்டும் துவக்கம்

/

ரூ.5 கோடியில் சாலை பணி சித்தாமூரில் மீண்டும் துவக்கம்

ரூ.5 கோடியில் சாலை பணி சித்தாமூரில் மீண்டும் துவக்கம்

ரூ.5 கோடியில் சாலை பணி சித்தாமூரில் மீண்டும் துவக்கம்


ADDED : மார் 02, 2024 10:38 PM

Google News

ADDED : மார் 02, 2024 10:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:சித்தாமூர் அருகே சித்தாமூர் - பெருக்கரணை கிராமம் செல்லும், 3.60 கிலோமீட்டர் துார தார்ச்சாலை உள்ளது.

இந்த சாலையை கரிக்கந்தாங்கல், பூங்குணம், பழவூர், கன்னிமங்கலம், புத்துார், முகுந்தகிரி, பெருக்கரணை ஆகிய கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக பழுதடைந்து, ஜல்லிகள் சிதறி இருந்ததால், தினமும் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் விவசாய வேலைக்கு செல்வோர் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

எனவே, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், 3.60 கிலோமீட்டர் சாலையை சீரமைக்க, 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 5.03 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த ஆக., மாதம் சாலை சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன, சாலையின் நடுவே மழைநீர் கால்வாய்கள் செல்லும் 10 இடங்களில் சிறுபாலங்கள் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்நிலையில், மூன்று மாதங்களாக சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டு உள்ளதாக, அப்பகுதி வாசிகள் குற்றஞ்சாட்டினர்.

இதுதொடர்பாக, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சாலை சீரமைக்கும் பணி மீண்டும் துவங்கப்பட்டு நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us