sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் மழைநீர் கால்வாய் பணிக்கு ரூ.60 லட்சம் ஒதுக்கீடு

/

செங்கையில் மழைநீர் கால்வாய் பணிக்கு ரூ.60 லட்சம் ஒதுக்கீடு

செங்கையில் மழைநீர் கால்வாய் பணிக்கு ரூ.60 லட்சம் ஒதுக்கீடு

செங்கையில் மழைநீர் கால்வாய் பணிக்கு ரூ.60 லட்சம் ஒதுக்கீடு


ADDED : ஜன 13, 2025 11:40 PM

Google News

ADDED : ஜன 13, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டு நகராட்சியில், 33 வார்டுகளில் மழைநீர் கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, நகரவாசிகள், நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.

இதையடுத்து, பொது நிதியின் கீழ், சின்னம்மன் கோவில் தெருவில் புதிதாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு, 7 லட்சம் ரூபாயும், கங்கையம்மன் கோவில் தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு, 8.30 லட்சம் ரூபாயும், வடுகர் தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு, 3.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

மேலும், அண்ணாசாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு 6 லட்சம் ரூபாய், ராஜாஜி தெருவில் புதிய மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு 5 லட்சம் ரூபாய், காண்டீபன் தெருவில் புதிய மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு 6 லட்சம் ரூபாய், அழகேசன் தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கு, 8.50 லட்சம் ரூபாய் என, மொத்தம் 59.3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் செய்யப்பட உள்ளன.

இப்பணிகளை செயல்படுத்த, நகர மன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us