/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடன் வாங்கி தருவதாக ரூ.70 லட்சம் மோசடி
/
கடன் வாங்கி தருவதாக ரூ.70 லட்சம் மோசடி
ADDED : பிப் 22, 2024 10:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி அடுத்த, பூந்தமல்லியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில், 64. இவரிடம், கசாலி என்பவர் 2014ல் அறிமுகமாகி, கடன் பெற்றுத் தருகிறேன் எனக்கூறி உள்ளார்.
கசாலியின் பேச்சை நம்பி, தன் தாய்க்கு சொந்தமான, 2,604 சதுர அடி இடத்தை வங்கியில் அடமானம் வைக்க முன்வந்தார்.
இதையடுத்து, எஸ்.பி.ஐ., வங்கியில் இருந்து 1.20 கோடி ரூபாயை, 2014ல், தன் வங்கி கணக்கில் கடனாக பெற்ற கசாலி, அதில் 50 லட்சம் ரூபாயை மட்டும், முகமது இஸ்மாயிலுக்கு தந்துள்ளார். மீதிப் பணத்தை தருவதாகக் கூறி, 10 ஆண்டுகளாக இழுத்தடித்துள்ளார்.
இது குறித்து வழக்கு பதிந்த ஆவடி போலீசார், நேற்று முன்தினம் கசாலியை கைது செய்தனர்.