/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தையில் உடன்பாடு கம்பி வேலி அகற்றப்பட்டு இறுதி ஊர்வலம்
/
ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தையில் உடன்பாடு கம்பி வேலி அகற்றப்பட்டு இறுதி ஊர்வலம்
ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தையில் உடன்பாடு கம்பி வேலி அகற்றப்பட்டு இறுதி ஊர்வலம்
ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தையில் உடன்பாடு கம்பி வேலி அகற்றப்பட்டு இறுதி ஊர்வலம்
ADDED : அக் 12, 2024 11:27 PM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, பொற்பனங்கரணை ஊராட்சி உள்ளது. இங்கு, 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி வாசிகள், தங்கள் ஊரில் நடக்கும் இறுதி ஊர்வலத்தை, தனி நபருக்கு சொந்தமான பட்டா நிலத்தின் வழியாக, 100 ஆண்டுகளுக்கும் மேலாக மயனாத்திற்கு கொண்டு சென்று, இறுதிசடங்கு செய்து வந்துள்ளனர்.
தற்போது, அதே பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் என்கிற பாபு என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் கம்பி வேலி அமைத்துள்ளார்.
பொற்பனங்கரணை ஊராட்சியில் உள்ள மயான பாதைக்கு செல்லும் வழியில், தனிநபர் ஒருவர் கம்பி வேலி அமைத்து தடுப்பு ஏற்படுத்தி உள்ளார். இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து, சில நாட்களுக்கு முன், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜனிடம் மனு அளித்துள்ளனர். மனுவை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, மனுதாரர்களிடம் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே சிகிச்சையில் இருந்த புவனேஸ்வரி, 85, என்பவர், உயிரிழந்தார்.
மயானத்திற்கு இறுதி ஊர்வலம் கொண்டு செல்லும் வழியில், கம்பி வேலி அமைத்து, தனிநபர் தடுப்பு ஏற்படுத்தி உள்ளார் என, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அப்பகுதி வாசிகள் தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் மேகலா, வட்டாட்சியர் துரைராஜன் மற்றும் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன், அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன் உள்ளிட்டோர், இருதரப்பு மக்களிடம் பேச்சு நடத்தினார்.
பட்டா நிலத்தின் வழியாக, யிரிழந்த புவனேஸ்வரி என்பவரின் சடலத்தை எடுத்துச் செல்லலாம். இனிமேல் அனுமதி வழங்கப்படாது.
இதைத் தொடர்ந்து, ஒரு வாரத்திற்குள் பொற்பனங்கரணை கிராமத்தில், காலனி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு, இறந்தவரின் சடலத்தை எடுத்து செல்லும் வகையில், மாற்றுப்பாதை ஏற்படுத்தப்படும் என, உத்தரவாத கடிதம் எழுதி, வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன் மற்றும் ஊராட்சி தலைவர் கவிதா ஆகியோர் கையொப்பமிட்டு, இரு தரப்பினரிடம் ஒப்படைத்தனர்.