sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் சேம்புலிபுரம் இருளர்கள் எதிர்பார்ப்பு

/

தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் சேம்புலிபுரம் இருளர்கள் எதிர்பார்ப்பு

தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் சேம்புலிபுரம் இருளர்கள் எதிர்பார்ப்பு

தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் சேம்புலிபுரம் இருளர்கள் எதிர்பார்ப்பு


ADDED : மார் 31, 2025 02:17 AM

Google News

ADDED : மார் 31, 2025 02:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி, 10வது வார்டுக்கு உட்பட்டது, சேம்புலிபுரம் கிராமம். இங்குள்ள பச்சைவாழியம்மன் கோவில் அருகே, கடந்த 35 ஆண்டுகளாக, இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.

மரம் வெட்டுதல், தேங்காய் பறித்தல் போன்ற கூலி வேலைக்குச் சென்று, தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2007ம் ஆண்டு தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக பட்டா வழங்கப்பட்டு, 16 குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டிக் தரப்பட்டன.

இந்த வீடுகள் தற்போது, மிகவும் பழுதடைந்து, மழைக் காலங்களில் வீட்டில் தண்ணீர் கசிவதால் அவதிப்படுகின்றனர்.

தற்போது, இங்கு கூடுதலாக உள்ள 13 குடும்பத்தினருக்கு வீடு இல்லாததால், ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்களாகவும், குடிசைகள் அமைத்தும் வசித்து வருகின்றனர்.

ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள் வசிப்பதால், இடநெருக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, சேம்புலிபுரம் பகுதியில் வசிக்கும் 29 இருளர் குடும்பத்தினருக்கும், புதிய தொகுப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us