sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை ரயில் நிலைய மேம்பாட்டு பணி இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டம்

/

செங்கை ரயில் நிலைய மேம்பாட்டு பணி இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டம்

செங்கை ரயில் நிலைய மேம்பாட்டு பணி இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டம்

செங்கை ரயில் நிலைய மேம்பாட்டு பணி இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க திட்டம்


ADDED : நவ 15, 2024 01:11 AM

Google News

ADDED : நவ 15, 2024 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இதன் வழியாக, சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு விரைவு ரயில்கள் சென்று வருகின்றன.

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மற்றும் அரக்கோணம் ஆகிய பகுதிகளுக்கு, மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையத்தில் இருந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பயணியர் சென்று வருகின்றனர்.

இந்த வளாகத்தில், டிக்கெட் கவுன்டர், முன்பதிவு மையம் ஆகியவை தனியாக உள்ளன. இதனால், பயணியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

எனவே, ரயில் நிலைய நடைமேடை பகுதியிலேயே டிக்கெட் கவுன்டர், முன்பதிவு மையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என, ரயில்வே நிர்வாகத்திடம் சமூக ஆர்வலர்கள் வலிறுத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து, ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணி மேற்கொள்ள, அம்ரித் பாரத் திட்டத்தில், 22.14 கோடி ரூபாய் நிதியை, ரயில்வே நிர்வாகம் ஒதுக்கீடு செய்தது.

இப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை, பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக, கடந்த ஆண்டு, ஜூலை மாதம் 12ம் தேதி துவக்கி வைத்தார்.

இப்பணிகளை, 150 நாட்களில் முடிக்க வேண்டும் என, ஒப்பந்ததாரர்களுக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், கடந்த ஓராண்டு கடந்தும், ரயில் நிலைய பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.

இதனால், ரயில் நிலையம் செல்லும் பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, பயணியர் நலன்கருதி, பணியை விரைந்து முடிக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

அம்ரித் திட்டத்தில் செயல்படுத்தப்படும் பணிகளை, வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடித்து தர, தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாக, ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us