sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குண்டும் குழியுமான சாலையில் கழிவுநீர் தேங்குவதால் சீர்கேடு

/

குண்டும் குழியுமான சாலையில் கழிவுநீர் தேங்குவதால் சீர்கேடு

குண்டும் குழியுமான சாலையில் கழிவுநீர் தேங்குவதால் சீர்கேடு

குண்டும் குழியுமான சாலையில் கழிவுநீர் தேங்குவதால் சீர்கேடு


ADDED : மே 30, 2025 01:34 AM

Google News

ADDED : மே 30, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொண்டமங்கலம் ஊராட்சியில், 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் கோவிந்தாபுரம் -- கொண்டமங்கலம் செல்லும் சாலை, 3.3 கி.மீ., துாரம் உடையது. திருப்போரூர் - சிங்கபெருமாள் கோவில் சாலையின் இணைப்பு சாலையான இது, பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இந்த சாலையின் இருபுறமும் கழிவுநீர் செல்ல வழி இல்லாததால், சாலையில் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி உள்ளது. மேலும், சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலை நடுவே தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது.

இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

இந்த பகுதியில் மழைநீர் செல்லும் கால்வாயை பலர் ஆக்கிரமிப்பு செய்து, மாட்டுச்சாணம் கொட்டி தண்ணீர் வெளியேற முடியாதபடி செய்து உள்ளனர்.

மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல வழி இல்லை.

இந்த சாலையை சீரமைக்க, நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகங்களில் கோரிக்கை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணாவிட்டால், சுற்றியுள்ள கிராம மக்களை திரட்டி, அனுமந்தபுரம் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில் போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us