sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செய்யூர்- - அச்சிறுபாக்கம் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

/

செய்யூர்- - அச்சிறுபாக்கம் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

செய்யூர்- - அச்சிறுபாக்கம் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

செய்யூர்- - அச்சிறுபாக்கம் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை


ADDED : ஜன 24, 2024 09:16 PM

Google News

ADDED : ஜன 24, 2024 09:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் முதல் அச்சிறுபாக்கம் வரை, தடம் எண் 'டி-19' அரசு பேருந்து இயக்கப்படுகிறது. ஏற்கனவே, டி-19 தடத்தில் இரண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது.

செய்யூரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வட்டாட்சியர் அலுவலகம், துணை பதிவாளர் அலுவலகம், நுாலகம், அஞ்சலகம், அரசு மருத்துவமனை, வங்கி போன்றவை செயல்படுகின்றன.

இதனால், தினசரி நுாற்றுக்கணக்கான மக்கள் செய்யூருக்கு வந்து செல்கின்றனர். சென்னை, புதுச்சேரியில் இருந்து, கிழக்குக் கடற்கரை சாலை வழியாக பேருந்தில் வரும் மக்கள், எல்லையம்மன் கோவிலில் இறங்கி, ஷேர் ஆட்டோ மூலமாக செய்யூர் வந்து செல்கின்றனர்.

ஷேர் ஆட்டோ கிடைக்காத நேரங்களில், பொது மக்கள் நீண்டநேரம் காத்திருப்பதால், நேர விரயம் ஆகிறது. போதிய பேருந்து வசதி இல்லாமல், காலை மற்றும் மாலை வேளைகளில், பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், கூடுதல் அரசு பேருந்தை இயக்க வேண்டும் எனவும், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் விதமாக, தற்போது செய்யூர் வரை இயக்கப்படும் பேருந்தை, எல்லையம்மன் கோவில் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us