sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெண் வனக்காவலர்களுக்கு தங்குமிடம் அமைப்பு

/

பெண் வனக்காவலர்களுக்கு தங்குமிடம் அமைப்பு

பெண் வனக்காவலர்களுக்கு தங்குமிடம் அமைப்பு

பெண் வனக்காவலர்களுக்கு தங்குமிடம் அமைப்பு


ADDED : மே 26, 2025 12:33 AM

Google News

ADDED : மே 26, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வனச்சரக அலுவலகத்தின் கீழ் மதுராந்தகம், செய்யூர், உத்திரமேரூர் தாலுகாவில், 4,872 ஹெக்டேர் நிலப்பரப்பில், இலையுதிர் காப்புக்காடுகள் உள்ளன.

சமூக காடுகள், 3,000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளன.

இதில் கோழியாளம், தீட்டாளம், பெருங்கோழி, காட்டுக்கூடலுார், காட்டுக்கரணை, தோட்டச்சேரி, கொளத்தனுார், எடமச்சி, ராமாபுரம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காப்புக்காடுகள் உள்ளன.

இக்காடுகளில், 2,000க்கும் அதிகமான மான்கள், 1,000க்கும் அதிகமான மயில்கள், காட்டுப்பன்றி, முயல், நரி, குள்ளநரி, உடும்பு, குரங்கு போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன.

மதுராந்தகம் வனச்சரக அலுவலகம், அச்சிறுபாக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

அங்கு, பணி நிமித்தமாக செல்லும் பெண் வனக்காவலர்கள் தங்குவதற்காக, 2025 -- 26ல், 5.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக கட்டடம் கட்டப்பட்டு, பணிகள் முடிந்துள்ளன.

இந்த கட்டடம் விரைவில் திறக்கப்பட்டு, பெண் வனக்காவலர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us