/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
துப்பாக்கி சுடும் போட்டி: ஆவடி போலீஸ் அசத்தல்
/
துப்பாக்கி சுடும் போட்டி: ஆவடி போலீஸ் அசத்தல்
ADDED : ஜூலை 29, 2025 11:40 PM

ஆவடி, மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் ஆவடி போலீசார், தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றனர்.
தமிழக காவல் துறையில், 2025ம் ஆண்டு ஆண், பெண் காவலர்களுக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி, ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு அதிதீவிரப்படை பயிற்சி பள்ளி துப்பாக்கி சுடும் தளத்தில் கடந்த 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடந்தது.
இதில், ஆண், பெண் காவலர்களுக்கு தனித்தனியாக ரைபில், பிஸ்டல் ரிவால்வர், கார்பைன் ஸ்டன் கன் ஆகிய மூன்று பிரிவின் கீழ் 13 வகையான போட்டிகள் நடந்தன.
போட்டியில் ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் பணிபுரியும் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார், பிஸ்டல் ரிவால்வர் பிரிவில், 'ரன் அண்ட் ஷூட்' 40-30 யார்டுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் மற்றும் 'குயிக் ரிப்லெக்ஸ்' 25 யார்டுக்கான போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
திருநின்றவூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ., சுதா, 'ரன் அண்ட் ஷூட்' 40-30 யார்டுக்கான போட்டியில் தங்கப்பதக்கம், 'குயிக் ரிப்லெக்ஸ்' 25 யார்டுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம், 'ஸ்னாப் ஷூட்டிங்' 50 யார்டுக்கான போட்டியில் வெண்கலப் பதக்கம் மற்றும் பிஸ்டல் ரிவால்வர் பிரிவில், ஓவர் ஆல் பெஸ்ட் ஷாட்க்கான தங்கப்பதக்கம் வென்றார்.
ஆவடி போக்குவரத்து காவல் நிலைய பெண் காவலர் நந்தினி, கார்பைன் ஸ்டன் கன் பிரிவில், 25 யார்டுக்கான போட்டியில் 'பேட்டல் கிரவுச்' போட்டியில் தங்கப்பதக்கம், கார்பைன் ஸ்டன் கன் பிரிவிற்கான ரைபில் ஓவர் ஆல் பெஸ்ட் ஷாட்க்கான வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ரைபில் பிரிவில் 200 யார்டுக்கான போட்டியில் ஆயுதப்படை பெண் காவலர்கள் கோகிலா தேவி வெள்ளி பதக்கம், செல்வராணி, வெண்கலப் பதக்கம் வென்றார்.
அதேபோல், பெண்களுக்கான ரைபில் ஷூட்டிங் மற்றும் கார்பைன் ஸ்டன் கன் ஷூட்டிங் ஆகிய இரண்டு பிரிவுகளில் ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் பணிபுரியும் பெண் போலீசார் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் மற்றும் மூன்றாம் இடத்திற்கான கோப்பையை வென்றுள்ளனர்.
துப்பாக்கி சுடும் போட்டியில் வென்றவர்களை கமிஷனர் சங்கர், நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.