/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நேர்கல் தடுப்பு பகுதியில் படப்பிடிப்பு மாமல்லையில் தொடரும் அலட்சியம்
/
நேர்கல் தடுப்பு பகுதியில் படப்பிடிப்பு மாமல்லையில் தொடரும் அலட்சியம்
நேர்கல் தடுப்பு பகுதியில் படப்பிடிப்பு மாமல்லையில் தொடரும் அலட்சியம்
நேர்கல் தடுப்பு பகுதியில் படப்பிடிப்பு மாமல்லையில் தொடரும் அலட்சியம்
ADDED : டிச 23, 2024 01:51 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், மீனவ பகுதி கடற்கரை நேர்கல் தடுப்பில் வாகனங்களை நிறுத்தி படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இதனால், விபத்து, உயிரிழப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம், கோவளம், ஆலம்பரைகுப்பம் உள்ளிட்ட அழகிய கடற்கரை பகுதிகள் உள்ளன.
இயற்கை எழில் சூழ்ந்த கடற்கரையை ரசிக்கவும், அங்கு உலவவும், பிற பகுதியினர் படையெடுக்கின்றனர். திரைப்படம், தொலைக்காட்சி, யு டியூப் ஆகியவற்றுக்காக படப்பிடிப்புகளும் நடத்தப்படுகின்றன.
தற்போது கடற்கரையில் உள்ள நேர்கல் தடுப்புகளிலும், அபாய சூழலில் படப்பிடிப்பு நடத்துகின்றனர். சூலேரிக்காடு, நெம்மேலி உள்ளிட்ட மீனவ பகுதிகளில், கடலரிப்பை தடுக்க நேர்கல் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. இத்தடுப்பில் கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றை நிறுத்தி, அபாய சூழலில் படம் பிடிக்கின்றனர்.
தற்போதைய வடகிழக்கு பருவமழை தொடரும் சூழலில், கடல் சீற்றம் அதிகரித்து கொந்தளிக்கிறது.
ராட்சத அலைகள் தடுப்பிற்கு மேலும் எழும்பி மோதுகின்றன.
அங்கு ஆட்கள் இருந்தால், கடலுக்குள் இழுக்கும் அபாயம் உள்ளது. இத்தகைய அபாயம் உணராமல், அப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.
எனவே, நேர்கல் தடுப்பில் படப்பிடிப்பு நடத்துவதை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.